Friday, July 16, 2010

உண்மை பொருள் எது?

உண்மை பொருளை உணராமல் தோத்திரங்களை

கிளிப்பிள்ளைபோல் பல ஆண்டுகள் ஓதுவதால் யாது பயன் ?

உலகில் பெரும்பாலான மனிதர்கள் இறை வழிபாட்டை

ஒரு கடமையாகத்தான் செய்கிறார்களே ஒழிய அதில் முழு ஈடுபாடு

காட்டுவதில்லை என்பதுதான் உண்மை
தோத்திரங்களை பொருளுணர்ந்து ஓதினால் மட்டுமே உண்மை பொருளான

இறைவனை உணர்ந்துகொள்ளமுடியும்

உண்மை வடிவான இறைவனை உண்மை பேசாமல் பொய்யே பேசி வாழ்வு நடத்தும் மனிதர்களால் எவ்வாறு அடைய முடியும் ?

தர்மத்தின் வடிவான இறைவனை அதர்ம வழியில் வாழ்க்கை நடத்துபவர்களால் எவ்வாறு காண முடியும் ?

எல்லா உயிரிலும் கலந்துவிட்ட இறைவனை ஒரு வடிவத்தில் மட்டும் அடைத்துவைப்பது எப்படி சாத்தியம் ?

எத்தனை பிறவிஎடுத்தாலும் இறைவனை காண முடியாது

மனிதர்கள் தோத்திரங்களை ஓதுவதில் காட்டும் அக்கரையில் ஒரு சிறு கவனம் கூட பொருளை உணர்ந்துகொள்வதில் காட்டுவது கிடையாது

இந்த மனிதர்களில் பாமரர்களுடன் மெத்த படித்தவர்களும் அடங்குவர் .

வாழ்நாள் முழுவதும் சாத்திரங்களை பற்றி விவாதம் செய்வதால் என்ன பயன் ?

அதில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒரு சாதனையில் இறங்காமல் ஆயுளை வீணாக்குவதில் பயன் ஏதும் இல்லை .

ஒருவர் உதாரணத்திற்கு விஷ்ணு சஹாஸ்ரனாமத்தை பல ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் ஓதி வருகிறார் என்று வைத்துகொள்வோம் .
அதில் வரும் ஏதாவதொரு மந்திரத்தின் பொருளை உணர்ந்துகொண்டாலே அவர் ஞானம் பெற்றுவிடலாம் .ஆனால் அவ்வாறு உணர்வதற்கு முயற்சி செய்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .
இந்த உடலைத்தான் வியாசர் ஷேத்ரம் என்று கூறுகிறார்

இந்த உடலில்தான் சாட்சியாக பகவான் வாசம் செய்கின்றான் என்றும் கூறுகிறார்

ஆனால் எவரும் அவனை தன் உள்ளத்தில் தேடுவது கிடையாது

மாறாக அவனை கோயில்களிலும் ,மனிதர்களிடமும் உலகெங்கும் சுற்றி திரிந்து வாழ்நாளை வீனாக்கிகொண்டிருகின்றனர் .
இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு கஸ்துரி மான் தன்னிடம் உள்ள கஸ்தூரி நறுமணத்தை அறியாமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து வேட்டைகாரனிடம் சிக்கி மடிந்து போவதை போல் மனிதர்களும் தன்னுள்ளே வாசம் செய்யும் ஸ்ரீனிவாசனை அறியாமல் தன் ஆயுட்காலத்தை வீணாக்கி காலனுக்கி இரையாகின்றனர் .

தன்னுள் இறைவனை கண்டவனால்தான் பிற உயிர்களிடம் இறைவன் இருப்பதையும் அனைத்துமாக இருப்பதையும் உணர இயலும் .

இந்த நிலையை அடைந்தவர்கள் பல . அவர்களில் ஞானி சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளும் ஒருவர் . அதனால்தான் அவரால் சர்வம் பிரம்ம மயம் என்று பாட முடிந்தது என்பது உண்மை .

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home