Friday, November 28, 2008

அஜாமிளன் கதை

புராண விரிவுரையாளர்கள் அஜாமிளன்
என்பவனின் கதையை கூறி ,அவன் உயிர்
பிரியும்போது பயத்தினால்
தன் கடைசி மகன் நாராயணன் என்பவனை
அழைத்தவுடன் வைகுண்டத்திலிருந்து
கடவுள் நாராயணின் தூதர்கள் தோன்றி
அவனை எமனிடமிருந்து காப்பாற்றி
வைகுண்ட லோகத்திற்கு அழைத்து
சென்று முக்தி அளித்தார் என்று
என்று பல்லாண்டுகளாக சொல்லி வருகிறார்கள்
மக்களும் அதை கேட்டு வருகிறார்கள்
வாழ்நாள் முழுவதும் தீய செயல்கள் செய்து
தீயவர்களுடன் வாழ்க்கை நடத்திய அஜாமிளன்
ஒரே ஒரு முறை அதுவும் இறைவனை நினைந்து
அழைக்கப்படாத கூக்குரலை இறைவன் செவி மடுப்பானா
என்று சிலருக்கு சந்தேகம் எழலாம் .
நெருப்பை தெரிந்து தொட்டாலும் தெரியாமல்
தொட்டாலும் அது தொடுபவரை சுடுவதுபோல்
இறைவனின் நாமத்தை வேறு இந்த சிந்தனையுமின்றி
உச்சரித்தால் நிச்சயம் அது சொல்பவரை காக்கும் என்பதை
வலியுறுத்துவதற்காக இந்த கதை சொல்லப்பட்டுள்ளது
என்பதை புரிந்துகொள்ளவேண்டும்
ஒவ்வொருவரும் அஜாமிளன் போல் தீய வாழ்க்கை
வாழாமல் இக்கணமே இறை நினைவுடன் நல்லதோர்
வாழ்க்கை பிறருக்கு நன்மை பயக்கும் வகையிலும்,
பழிக்கு ஆளாகாமலும் வாழ தொடங்கினால்
வாழும் காலமும்வாழ்ந்து முடித்த பின்னரும் இன்பமே
தொடரும் என்பதில் ஐயமில்லை .
எவ்வளவு காலமாக இருள் சூழ்ந்திருந்தாலும்
ஒரு அறையில் எரியும் விளக்கை கொண்டு வந்தவுடன்
இருள் அக்கணமே நீங்குவதைபோல்
இருண்ட மனதில் ஒளிமயமான இறைவனின்
பெயரை நம்பிக்கையுடன்
உச்சரித்தால் நிச்சயம் இறைவனின் அருள்
கிடைக்குமென்பது சத்தியம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home