மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்.
உண்மையான பக்தன் யார்?
ஒரு பக்தன் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது
இரக்கமே உருவானவனாக இருக்கவேண்டும்
அவன் இறுமாப்பும் தன்னலமற்ற்வனுமாக
இருக்கவேண்டும்
குளிரையும்,வெப்பத்தையும்,சுகத்தையும்,
துக்கத்தையும் சமமாக கருதவேண்டும்
எப்போதும் மன்னிக்கும் சுபாவம்
உள்ளவனாக இருக்கவேண்டும்
போதுமென்ற மனம் கொண்டவனாக இருக்கவேண்டும்
தான் செய்யும் தீர்மானங்களை உறுதியுடன்
செயல் படுத்துபவனாக இருக்கவேண்டும்
தன்னையே கடவுளிடம் அர்ப்பணம்
செய்தவனாக இருக்கவேண்டும்
அவனால் யாருக்கும் பயம் ஏற்படக்கூடாது
அவனும் எவரையும் கண்டு அஞ்சக்கூடாது
மகிழ்ச்சி,துயரம், பயம் ஆகியவற்றிலிருந்து
அவன் விடுபட்டவனாக இருக்கவேண்டும்
அவன் தூய்மையானவனாகவும் , நற்பணிகளை
செய்யும் திறம் பெற்றவனாகவும்
இருக்கவேண்டும்
அதே சமயம் அப்பணிகளின் மூலம் ஏற்படக்கூடிய
பலாபலன்களை பொருட்படுத்தக்கூடாது நற்பலனையோ
அல்லது தீயபலனையோ அவன் துறந்துவிடவேண்டும்
நண்பனையும் விரோதியையும் அவன் சமமாக கருதவேண்டும்
தனக்கு பிறர் மரியாதை செய்தாலும் அவமரியாதை
செய்தாலும் ,தன்னை பிறர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும்
அவன் எல்லாவறையும் சமமாக கருதவேண்டும்
அவன் மௌனத்தையும், தனிமையையும் விரும்பவேண்டும்
ஒழுங்கான உறுதியான அறிவு படைத்தவனாக இருக்கவேண்டும்
இத்தனை லட்சணங்கள் உள்ளவன்தான் உண்மையான பக்தனாவான்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home