Tuesday, September 21, 2010

சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள்

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு

உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு

உள்ளிருந்து உன்னை இயக்குபவன் அவனன்றோ

எல்லாம் உன்னால்தான் என நீ நினைப்பது தவறன்றோ

அன்போடு அனைவரின் நலம் நாடு

அதுவே அவனுக்கு நீ செய்யும் வழிபாடு

கண்ணால் காண்பதனைத்தும் அவன் வடிவே

உன் கண்ணுள் காணும் ஒளியாய் இருப்பதும் அவன் அருளே

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை

அது ஏன் என்று நீ ஆராய்வது வீண் வேலை

சாத்திரங்கள் எல்லாம் அவன் புகழ் பாடும்

நீ அவனை தோத்திரம் செய்தால் அருள் கூடும்

என்றும் நல்லோரின் கூட்டுறவை நாடிடுவாய்

தீயோரின் கூட்டுறவை விட்டு ஓடிடுவாய்

பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்

உன்னை பாசத்தோடு பக்கத்தில் நின்று காத்திடுவான்

அரிதாய் கிடைத்த மனித பிறவியை

அவனை அறிய முற்படாது போனால்

மீண்டும் மீண்டும் பிறபிறப்பு சுழலில் சிக்கி

மாளா துன்பத்தில் உழல நேரிடும்

என உணர்ந்திடுவாய்

கடமையை தவறாது காலத்தில் செய்திடுவாய்

கணநேரமும் கடவுளை மறவாமல் வாழ்ந்திடுவாய்

காலமெல்லாம் கவலையற்று வாழ

அவன் அருள் செய்திடுவான்